திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை சேர்ந்தவர் மணிகண்டன். கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த சில நாட்களாக திருமணத்திற்கு பெண் பார்த்து வந்துள்ளனர். எந்த இடங்களிலும் பெண் அமையாத நிலையில் திருமணம் ஆகாமல் இருப்பதை எண்ணி விரக்தியடைந்த மணிகண்டன் மாரியம்மன் கோவிலின் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் ஒன்றில் ஏறி அதில் இருந்த மின் கம்பி ஒன்றை பிடித்துள்ளார்.
இதனால் மணிகண்டன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பூர் காவல்துறையினர் மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.