Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“வாட்ஸ்-அப்பில் அவதூறு” அரியலூரில் இளைஞர் கைது…!!

பொன்பரப்பியில் வாட்ஸ்-அப்பில் அவதூறு கருத்துக்களை பரப்பிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தின் ஜெயங்கொண்டன் பகுதியை அடுத்துள்ள பொன்பரப்பியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினரிடையே மோதல் உருவாக்கிகலவரம் ஏற்பட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்கள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி மற்றும் மாவட்ட SP  சீனிவாசன் ஆகியோர் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்- அப்பில் ஒரு தரப்பு சமூகத்தினரை பற்றி மிரட்டும் வகையில் , அவதூறாக பேசிய வீடியோ பதிவிட்டார். இதனை அறிந்த உதயநத்தம் கிராம நிர்வாக அதிகாரி கார்த்திக்கேயன் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில்  தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் புகாரின் பேரில்வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.மேலும் இது தொடர்பாக போலீஸ்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |