ராமநாதபுரத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 இளைஞர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்.பி பட்டினத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் காவல்துறையினர் எஸ்.பி பட்டினத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த இம்ரான்கான்(22), முகம்மது ஜமீல்(20), செய்யது அபுதாஹிர்(35) ஆகிய 3 இளைஞர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் உடனடியாக அந்த 3 இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த 1 1/2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.