Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம்….. சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்….. போலீஸ் நடவடிக்கை…..!!

பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதயனேந்தல் கிராமத்தில் முத்துராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதிகள் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தர்ஷனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மகாதேவி திடீரென விஷம் குடித்துள்ளார்.

இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் மகாதேவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் மகாதேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இதற்கிடையில் மகாதேவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பேருந்து நிலையம் அருகே மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகாதேவியின் உறவினர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். அதன்பிறகு மகாதேவியின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

Categories

Tech |