குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நம்பேடு கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கற்பகம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இதனை அடுத்து இந்த தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக விஜயகுமார் என்பவர் இருக்கிறார். இவர் 12 – ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பலத்த மழையின் காரணமாக திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் கற்பகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பிறகு விஜயகுமார் பலத்த காயமடைந்து உள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.