Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அறைக்கு சென்ற மாமியார்…. மருமகளுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடேசன் அழிவிடைதாங்கி கிராமத்தில் தனது சகோதரி வீட்டில் தங்கி வசித்து வருகிறார்.

கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி அன்று ராஜேஸ்வரி தனது கணவரின் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அதன் பின்னர் நீண்ட நேரமாகியும் ராஜேஸ்வரி எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாமியார் ராஜேஸ்வரியின் அறைக்கு சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |