Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“நான் போலீஸ் ஆகணும்” வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காய்பட்டணம் பகுதியில் ஜெனித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் போலீஸ் பணிக்கு செல்ல முயற்சி செய்த ஜெனித் தோல்வி அடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெனித் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜெனித் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |