Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற வாலிபர்…. நடந்த கோர சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாய கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது வாலிபர் ஒருவர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுஎடையார் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தகவலின் படி விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் செல்வராஜ் உடலை மீட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |