ரயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு பகுதியில் முகமது யாசின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது பாகத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது மயிலாடுதுறை-கும்பகோணம் ரயில் மோதி முகமது பாகத் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
மேலும் உடல் மற்றும் தலை தனித்தனியாக சிதைந்து கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகமதின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.