Categories
உலக செய்திகள்

உலகிலேயே மிகவும் பெரிதான பாம்புகள்… தோள்களில் சுமந்துகொண்டு இளைஞர் நடனம்…!!!

இந்தோனேசிய நாட்டில் ஒரு இளைஞர் இரண்டு பெரிய பாம்புகளை தன் தோள்பட்டையில் வைத்துக்கொண்டு நடனமாடியிருக்கிறார்.

உலகிலேயே மிகவும் பெரிதான பாம்பாகக் கருதப்படும் பைத்தான் வகை பாம்புகள் விஷத்தன்மை இல்லாதது. மேலும் 20 அடிகளுக்கு மேலாக வளரக்கூடியது. எனினும் தன் எடையைக் காட்டிலும் மிகப்பெரிய எடை உடைய உயிரினங்களை உண்ணக்கூடிய திறன் கொண்டவை.

மேலும், சில நேரங்களில் இந்த வகை பாம்புகள் மனிதர்களையும் விழுங்குவதுண்டு. இந்நிலையில், இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு இளைஞர் 20 அடிக்கும் அதிகமான நீளமுடைய இரண்டு பாம்புகளை தன் தோள்களில் வைத்துக்கொண்டு நடனமாடியிருக்கிறார். அதிக கவனத்தோடு நிதானமாக நடனமாடியிருக்கிறார். அந்த இளைஞரின் வீடியோவானது இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Categories

Tech |