சகோதரியின் கணவரை ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள வண்ணிவேலம்பட்டி பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஞ்சம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கஞ்சம்மாளின் சகோதரரான ராமன் என்பவர் தனது சகோதரியை வைத்து உனக்கு வாழ தெரியவில்லை என்று சந்திரனிடம் கூறியுள்ளார்.
இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது கோபத்தில் ராமர் சந்திரனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சந்திரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.