17 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 25 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கும் 17 வயதுடைய சிறுமிக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அன்பு ராஜா என்பவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 17 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.