Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

17 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் காணாமல் போன சிறுமியை அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அப்பகுதியில் வசிக்கும் முத்து என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் முத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டனர்.

Categories

Tech |