Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… ரகசிய தகவலில் சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள அழகாபுரம் பசுவகல் குண்டத்து மேடு பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை கைது செய்து அவரிடம் விசாரணை செய்த போது அவர் அப்பகுதியை சேர்ந்த கீர்த்திவாசன் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடமிருந்து 2 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் சாராயம் விற்பனை செய்ததற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |