Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

குழந்தை இல்லாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் ஹாஜியார் பகுதியில் தினகரன் என்ற கார் டிரைவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு யோகலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் யோகலட்சுமி மிகவும் மன வருத்தத்துடன் இருந்துள்ளார். இந்நிலையில் விரக்தி அடைந்த யோகலட்சுமி தன்னுடைய உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து கருகிய நிலையில் இருந்த யோகலட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  யோகலட்சுமிக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து கல்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |