Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயார்…. மகளுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் சண்முகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மகேஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முகவேல் இறந்து விட்டதால் மன உளைச்சலில் இருந்த மாரியம்மாளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மகேஸ்வரி தனது வீட்டில் இருக்கும் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மகேஸ்வரி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த மகேஸ்வரியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |