இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் ரங்கசாமியின் 3-வது மகனான கிருஷ்ணவேணி என்ற பெண்ணிற்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் மொட்டை மாடிக்கு சென்ற கிருஷ்ணவேணி திடீரென அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.