Categories
உலக செய்திகள்

உங்களுக்கு ஆறு மாசம் அதிக எதிர்ப்பு சக்தி இருக்கும்.. கொரோனாவால் ஒன்னும் பண்ண முடியாது… ஆய்வு மையம் அறிவிப்பு…!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ஆறு மாதம் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று பிரிட்டன் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் கொரோனா என்ற பெருந்தொற்று பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரை 105,921,946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,309,188பேர்  உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெற்று குணமடைந்து 77,551,577 பேர் இதுவரை வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ஆறு மாதம் நோய் எதிர்ப்பு தன்மை அதிக அளவில் இருக்கும் என்று பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அவர்களுக்கு மீண்டும் தொற்று பரவுவது அரிது என்று குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் ஆய்வு மையம் தெரிவித்ததாவது, வைரஸால் பாதிப்படைந்து குணமடைந்தவர்களில் 99 சதவீதம் பேருக்கு மூன்று மாத நோய் எதிர்ப்பு தன்மை நீடித்திருக்கும். 88 சதவீதத்தினருக்கு 6 மாதம் வரை நோய் எதிர்ப்புத்தன்மை நீட்டி இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |