Categories
மாநில செய்திகள்

“24 மணிநேரமும் கடைகளை திறக்கலாம்” தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வதற்கு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையில்,  தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், தொழில் நிறுவனங்கள், ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் தியேட்டர்கள் ஆகியவை வருடத்தின் 365 நாட்களும் திறந்திருக்கலாம். அதே நேரத்தில் பணியாளர் ஒருவரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலையில் ஈடுபடுத்த வேண்டும். பெண் பணியாளர்கள் இரவு 8 மணிக்கு மேல் பணியாற்ற கூடாது.

அதே போல இரவில் பெண்கள் பணி செய்வதாக இருந்தால் அதற்கு எழுத்துப்பூர்வமாக அவர்களிடம் நிறுவனங்கள் அனுமதியை பெற வேண்டும். பெண் பணியாளர்கள் வேலை செய்யும் போது, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த புதிய நடைமுறை அடுத்த 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |