Categories
தேசிய செய்திகள்

என்ன கொடுமடா இது?…. இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழா?…. பரபரப்பு சம்பவம்….!!!!

மத்திய பிரதேசத்தில் இறந்துபோன ஒருவரின் செல்போனுக்கு தடுப்பூசி 2-வது டோஸ் செலுத்தியதாக குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசம் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்த புருஷோத்தம் சாக்கியவார் என்ற முதியவர், கடந்த மே மாதம் உயிரிழந்தார். 78 வயதுடைய அந்த முதியவர் இறந்து 6 மாதங்கள் நெருங்கிவிட்ட நிலையில், அவருக்கு கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தப்பட்டதாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதுபற்றி உயிரிழந்த ஷாக்யவாரின் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், எனது தந்தையின் செல்போன் எண்ணிற்கு கடந்த 3-ஆம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளதாக தகவல் வந்திருந்தது. மேலும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழும் தரவிறக்கம் செய்ய முடிந்தது என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் பற்றி மாவட்ட தடுப்பூசி அதிகாரியிடம் கேட்டபோது, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆணையிட்டுள்ளதாகவும், கணினியில் ஏற்படும் பழுது காரணமாகவும் இதுபோன்ற குளறுபடிகள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |