Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final : சவுத்தம்டனில் மழையால்….. 4-வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்…!!!

உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 4வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 18ஆம் தேதி தொடங்க இருந்தத போட்டியின் முதல் நாள் ஆட்டம்  மழையால் பாதிக்கப்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 2-வது நாள் போட்டி நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

2 வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 64 .4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு நேற்று 3 ம் நாள் ஆட்டம் தொடங்கியது. இறுதியாக இந்திய அணி 92.1 ஓவர்களில் 217 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. அதன்பிறகு நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இதில் 49 ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்த போது 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு 4வது நாள் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் அங்கு மழை பெய்து வருவதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |