Categories
உலக செய்திகள்

விருது வாங்க சென்ற எழுத்தாளர்…. மேடையில் செய்த காரியம்…. என்ன காரணம்?….

சுவிட்சர்லாந்து நாட்டின் எழுத்தாளருக்கு ஜெர்மன் புக் விருது கிடைத்ததை தொடர்ந்து, அவர் மேடையிலேயே மொட்டை அடித்திருக்கிறார்.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கிம் டி எல் ஹொரைசன் என்ற எழுத்தாளர் தன் முதல் நாவலுக்காக (Blutbuch) german book என்ற விருதை பெற்றார். அவரை வெற்றியாளராக அறிவித்த பின் மேடைக்குச் சென்று ஒரு பாடல் பாடினார். அதனைத்தொடர்ந்து ட்ரிம்மரை வைத்து தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டார்.

அதற்கான காரணம் என்னவெனில், ஈரான் நாட்டில், ஹிஜாப் சரியாக அணியவில்லை என்ற காரணத்தால் கைது செய்யப்பட்டு உயிரிழந்த 22 வயது இளம் பெண்ணிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டங்கள் நடக்கின்றன. அதற்காக தன் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அவர் மொட்டை அடித்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

german book விருதானது, ஜெர்மன் நாட்டின் சிறந்த மொழி புத்தகத்திற்காக கொடுக்கப்படும். விருது பெறுபவருக்கு 25 ஆயிரம் யூரோ பரிசு தொகையும் வழங்கப்படும். பாரம்பரியமாக நடத்தப்படும் இந்த விழாவில் தான் விருதை பெற்றவுடன் அவர் மேடையில் வைத்தே தன் தலை முடியை சவரம் செய்து விட்டார்.

Categories

Tech |