ஜெர்மனியில் பெய்து வரும் கனமழையால் காவல்துறையினரும், ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மழைநீர் தொடர் மழையால் வெள்ளம் வடியாமல் வீடுகளை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனிடையே ரைன்லேண்ட்-பேலட்டினேட் நகரில் ஸ்கல்டு பகுதியில் நேற்று பெய்த கனமழையால் 6 வீடுகள் இடிந்து விழுந்தது.
மேலும் 25 வீடுகள் இடிந்து விழும் நிலையிலும் உள்ளது. இதனைத்தொடர்ந்து 30 பேர் வரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினரும் ராணுவ பணியாளர்களும் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.