Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மதுப் பழக்கத்தினால்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளியான சுதாகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தந்தையின் இறப்பின் பிறகு மதுவிற்கு அடிமையாகி உள்ளார். கடந்த நவம்பர் 8 – ஆம் தேதியன்று சுதாகர் மது அருந்திவிட்டு தாயை சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதன்பிறகு சுதாகர் வீட்டில் இருக்கும் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |