Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டிற்கு சென்ற மனைவி …. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓ.நடுவப்பட்டி பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக  நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராமலிங்கம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பிறகு வீட்டிற்கு வந்த பார்த்த அவரது மனைவியான லட்சுமி தனது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |