தென்னை மரத்தில் தேங்காய் பறித்து கொண்டிருந்த தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் உள்ள குட்செட் தெருவில் மூக்கையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுமை தூக்கும் தொழில் மற்றும் தேங்காய் பறிக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மூக்கையா ராமநாதபுரம் சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் தேங்காய் பறித்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மூக்கையா மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே துரதிஷ்டவசாக மூக்கையா உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.