Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு பாலிடெக்னிக் மாணவர்களின் அசத்தல் முயற்சி..!!!!

சென்னை ஆர்.கே.நகர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி  மாணவர்கள் ஓவியங்களை வரைந்து  அசத்தியுள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகர் புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் சாலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் சுற்றுச்சுவரில் சில பொறுப்பற்ற சுவரொட்டிகள் ஒட்டியும், அசுத்தம் செய்தும் வந்தனர்.

Image result for சுவர் ஓவியம்

இதனால் பல்வேறு சங்கடங்களுக்கு ஆளான மாணவர்கள் சுற்றுச்சுவரை சுத்தப்படுத்தி சுண்ணாம்பு அடித்து அழகான ஓவியங்களை வரைந்துள்ளனர். சுவற்றில்  முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவர்களின் உருவங்கள், நீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்கள் போன்றவற்றை மாணவர்கள் வரைந்து அசத்தியுள்ளார்.

Categories

Tech |