Categories
தேசிய செய்திகள்

“லிப்ட் கேட்ட பெண்” பைக்கில் ஏற்றி சென்று…. நாசம் செய்த 2 இளைஞர்கள்…. தேடுதல் வேட்டையில் போலீசார்…!!

இளைஞர்கள் இருவர் லிப்ட் கேட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தனியார் அமைப்பை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் முகத்தில் பலத்த காயங்களுடன் மயக்க நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரைக்கண்ட சிலர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினரின் இதுகுறித்த விசாரணையில், அந்த பெண் இரவு வேளையில் ஜஸ்பூர் மாவட்டத்தில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது இளைஞர்கள் 2 பேரிடம் அந்த பெண் லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் கூட்டிச் சென்றுள்ளனர்.

அப்போது அந்தப் பெண்ணை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்று அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அவரை இரும்பு ஆயுதத்தால் தாக்கியதால் முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் சுய நினைவை இழந்து ஒரு வாரத்திற்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து பின்னர் நினைவுக்கு  திரும்பியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அந்த இளைஞர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |