Categories
உலக செய்திகள்

பெண் இராணுவ அதிகாரிக்கு சிறை….. போராட்டம் நடத்தும் பெண்கள் மீது தாக்குதல்….. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு….!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண் ராணுவ அதிகாரியை தலிபான்கள் கைது செய்து சிறை வைத்த நிலையில், அவரை விடுவிக்க கோரி பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் நான்கு மாதங்களுக்கு முன்பு, மகளிர் சிறை இயக்குனர் அலியா அஸிசி  என்பவரை தலீபான்கள் சிறையில் அடைத்தனர். எனவே, அவரை விடுவிக்க கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், ஹசாரா இனத்தை சேர்ந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை எதிர்த்தும் பெண்கள் போராடி வருகிறார்கள். இந்நிலையில், போராட்டம் நடத்தும் பெண்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் பெப்பர் ஸ்பிரே போன்றவற்றை வீசி தலிபான்கள் விரட்டியடித்து வருகிறார்கள்.

Categories

Tech |