பிரிட்டனில் பிரபலமான கடற்கரையில், ஒரு பெண் சுமார் 150 அடி உயரத்திலிருந்து பாறையில் விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் மிக பிரபலமடைந்த டர்டில் டோர் என்ற சுற்றுலாத்தலம் இருக்கும் டோர்செட் என்ற இடத்தில் Man o’ War கடற்கரைக்கு அருகே செங்குத்தான மலை குன்று உள்ளது. அங்கு கடந்த திங்கட்கிழமை அன்று ஒரு பெண், கீழே இருக்கும் ஒரு நபரிடம், “இதோ வருகிறேன்” என்று சத்தமாக கூறிக்கொண்டே செங்குத்தான மலையில் இறங்கிவந்துள்ளார்.
எனவே அங்கிருந்த மக்கள் அவரை எச்சரித்திருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென்று 150 அடி உயரத்திலிருந்து பாறையில் விழுந்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக அவசர சேவைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும், மருத்துவ உதவியாளர்களும் அந்த பெண்ணை மீட்டனர். எனினும் அவர் விழுந்த சில வினாடிகளிலேயே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர்.