புதிதாக மதுப்பழக்கம் இருக்கும் ஆண்கள்தான் செக்ஸில் அதிகளவில் முரட்டுத்தனமாகச் செயல்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
பார்ட்டிக்குச் செல்லும் ஆண்கள் செக்ஸ் உறவு வைப்பதில் முரட்டுத்தனமாக இருப்பார்கள் என்று ஆய்வு தெரிவிக்கின்றது.அடிக்கடி பார்ட்டிகும் , பார்களுக்குச் செல்லும் இளைஞர்கள் தங்களது செக்ஸ் நடவடிக்கைகளில் மிகவும் முரட்டுத்தனமாக இருப்பார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பற்களுக்கு செல்லும் ஆண்கள் மது அருந்தவில்லை என்றாலும் கூட அவர்களுக்கு அந்த சூழல் அவர்களை முரட்டுத்தனமாக செயல்பட வைக்கிறது என்று வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் மைக்கேல் கிளெவெலண்ட் தெரிவித்துள்ளார்.
இதற்காக அவர் மெயில் மற்றும் ஆன்லைன் மூலம் ஓர் ஆய்வை நடத்தியுள்ளார். சுமார் 1,000 கல்லூரி இளைஞர்களை இந்த ஆய்வுக்காக ஈடுபடுத்தியதில் அவர்களிடம் ஒருநாளைக்கு எத்தனை முறை பார்களுக்குச் செல்வீர்கள் , மது அருந்துவீர்கள்என்று கேள்விகளை கேட்டுள்ளார். இதில் பாருக்கு வரும் பெண்களை நைஸ்சாக பேசி செக்ஸிற்கு அழைப்பீர்களா என்ற கேள்வியும் இடம்பெற்றுள்ளது.
இந்த கேள்விக்கு பதிலளித்தவர்கள் பாருக்கு வரும் பெண்களுக்கு அதிக மதுவை குடுத்து , குடிக்க வைத்து நைஸாக செக்ஸில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்த ஆய்வை ஆல்கஹால் அண்ட் ட்ரக்ஸ் ஜர்னலில் வெளியிடடது. அதில் புதிதாக மதுப்பழக்கம் கொண்ட ஆண்கள் ஒவ்வொருவரும் முரட்டுத்தனமாகச் செயல்படுவதாகக் தெரியவந்துள்ளது. மேலும் அதிகமாகளவில் பார்ட்டி மற்றும் பார்களுக்குச் செல்லும் ஆண்கள் சுயமாக செக்ஸ் இன்பம் பெற்றுக் கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.