Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிடம் 4 சீட் கேட்போமா ? விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை….!!

தேமுதிக நிர்வாகிகளுடன் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும்  கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த் , துணை செயலாளர் சுதீஷ் , பார்த்தசாரதி , அவைத் தலைவர் மோகன்ராஜ் உள்ளிட்ட முக்கியமான நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்களும் இதில் பங்கேற்றுக்ள்ளனர். மேலும் நடந்து முடிந்த நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டுகளை தெரிவிக்கப்பட்டது.

இதில் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் எப்படி பணியாற்றுவது , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இடம் பெற்றதில் உள்ளாட்சி தேர்தலில் எத்தனை இடங்களில் கேட்டுப் பெறுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள பட்டுள்ளது.உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 15 மாநகராட்சியில் நமக்கு தேவையான 3_இல் இருந்து  4 மாநகராட்சி மேயர் கேட்டு பெறுவதற்கான திட்டமும் வைத்துள்ளார்கள். அதேபோல எத்தனை சதவீத உள்ளாட்சி பிரதிநிதிகளை கேட்கலாம் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டு வருகின்றது.

Categories

Tech |