Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் ஊரடங்கு நீடிப்பா? அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை!

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 62,939ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,358ஆக உள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,109ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கட்டுள்ளது.

முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய இன்னும் 7 தினங்களே அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை மாலை ஆலோசனை நடத்த உள்ளார். காணொலி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்க இருக்கிறார்.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை முடிவிற்கு கொண்டு வரும் எண்ணத்தில் மத்திய அரசு இருப்பதாக கூறப்படுகிறது. 17ம் தேதிக்கு பின் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படாது என்று தகவல் வெளியானது. ஆனால் மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். எனவே ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என நாளை நடைபெறும் ஆலோசனையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஒருவேளை லாக்டவுனை நீக்கினால் எப்படி படிப்படியாக நீக்குவது.கட்டுப்பாடுகளை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்துவது என்பது தொடர்பாக ஆலோசிக்க உள்ளனர்.

Categories

Tech |