பழைய குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பரவியது .
நெல்லை மாவட்டம் ,வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் , எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க நேற்றிலிருந்து போராடி வருகின்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகமானதால் , தீப்பிடித்து இருக்கக்கூடும் எனவும் ,மூலிகைகள் மற்றும் செடிகளும் எரிந்து வருவதால், இயற்கை ஆர்வலர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.