கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிவபுரம் கிராமத்தில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சோபனா என்ற மனைவியும், அக்ஷயா என்ற மகளும், கோவேஷ் சென்ற மகனும் இருக்கின்றனர். தற்போது கொரோனா விடுமுறை கால கட்டத்தில் அன்பழகன் தனது வீட்டிலேயே தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி முதல் அன்பர்களின் காணவில்லை என்று ஷோபனா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து விசாரணை தீவிரம் அடைந்த பின்பு சோபனா தலைமறைவாகியுள்ளார். அதன்பிறகு காவல்துறையினர் சோபனாவை தீவிரமாக தேடி கண்டுபிடித்து அதிரடி விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பின் சோபனா திடுக்கிடும் வாக்குமூலத்தை அளித்துள்ளார். அதாவது சோபனாவுக்கு தர்ம ராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறிவிட்டது. இதனை அறிந்த கணவர் சோபனாவை கண்டித்து வைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சோபனா தனது கள்ளக்காதலனான தர்மராஜ் மற்றும் அவரின் நண்பரான விக்னேஷ் ஆகியோருடன் இணைந்து அன்பழகனை கத்தியால் குத்தி கொலை செய்து கொசஸ்தலை ஆற்றங்கரை பகுதியில் குழி தோண்டி புதைத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சோபனா தர்மராஜ் மற்றும் விக்னேஷ் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.