குடிபோதையில் தகாரறு செய்த கணவனை ஊதுகுழலால் தாக்கி கொன்ற மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் பகுதியை சேர்ந்த முருகேசன் தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் கல்பட்டிசத்திரத்தையடுத்த வத்தமணியகாரன்பட்டியில் வசித்து வருகிறார். கல் உடைக்கும் தொழிலை செய்துவரும் முருகேசனுக்கு குடிப்பழக்கம் உண்டு .இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வர இவருக்கும் இவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. மேலும் போதை தலைக்கேறி தனது மகளையே கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளார் .இதனால் கோபமடைந்த முருகேசனின் மனைவி அருகிலிருந்த ஊதுகுழலையெடுத்து தலையில் சரமாரியாக தாக்கினார்.
இதில் நிலைதடுமாறிய முருகேசன் மயங்கி விழுந்தார்.சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் முருகேசனை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலையே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கணவனை கொலை செய்த வழக்கில் பஞ்சவர்ணத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.