உத்திரபிரேதசத்தில் முத்தலாக் தடை சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்பும் தலாக் கூறிய கணவன் மீது மனைவி புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 31 ஆம் தேதி அன்று மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. முத்தலாக் தடைச் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
குறிப்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முத்தலாக் தடை சட்டம் பற்றி கூறுகையில், பழைய செயல்கள் குப்பையில் வீசப்பட்ட உள்ளதாகவும், முத்தலாக் தடை சட்டத்தால் முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் நீக்கப்பட்டு விடுதலை கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முஸ்லீம் கணவன் ,மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
மேலும் கணவர் பொறுப்பில்லாமல் வரும் வருமானத்தை செலவிட்டு வந்ததால் குடும்ப செலவுக்கு பணம் காணவில்லை. இதனால் விரக்தி அடைந்த மனைவி குடும்ப செலவிற்காக பணம் வேண்டும் என்று கணவரிடம் சண்டையிட்டுள்ளார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த மனைவியிடம் தலாக் என்று கூறி கணவன் விவாகரத்து செய்துள்ளார். பின் குடும்ப செலவிற்கு பணம் கேட்டதால் எனக்கு தலாக் கூறி விட்டதாகவும், தன் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும் கூறி கணவன் மீது காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.