Categories
உலக செய்திகள்

ஜெயிலுக்கு போக ஆசையா..? உங்களுக்கான வாய்ப்பு.. சுவிஸ் மாகாணம் வெளியிட்ட அறிவிப்பு..!!

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மாகாணம் சிறைக்கு செல்ல விரும்புபவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது.

பொதுவாக மக்கள் சிலருக்கு, சிறை எப்படி இருக்கும், அங்கு என்ன செய்வார்கள் என்று அறிந்துகொள்ள விருப்பம் இருக்கும். அப்படி உள்ளவர்களுக்கு தான் இந்த அரிய வாய்ப்பு. அதாவது சூரிச் மாகாணத்தில் ஒரு சிறை புதிதாக திறக்கப்படுகிறது. அங்கு சோதனைக்காக தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிறைக்கு, சென்றால் எப்படி இருக்கும் என்ற அனுபவத்தை அறிய அதிக மக்கள் ஆர்வத்துடன் உள்ளார்கள். அவர்களால் எந்த சமயத்தில் அங்கு இருக்க முடியாத நிலை ஏற்படுகிறதோ, அப்போது அவர்கள் சிறையிலிருந்து வெளியேறி விடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையானது அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் தொடங்கப்படும்.

Categories

Tech |