Categories
உலக செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த ஆராய்ச்சி.. பரிந்துரைக்கப்பட்ட 3 மருந்துகள்.. உலக சுகாதார மையம் வெளியிட்ட தகவல்..!!

உலக சுகாதார மையம், கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் மூன்று மருந்துகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்த இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

உலக சுகாதார மையத்தின் சார்பாக கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடிய மருந்தை கண்டறிவதற்கான ஆய்வு 52 நாடுகளில் நடைபெற்று வருகிறது. ஹைட்ராக்சிகுளோரோகுயின்  மற்றும் ரெம்டெசிவிர் உட்பட நான்கு மருந்துகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. அவை பயனளிக்கவில்லை என்று தீர்மானிக்கப்பட்டது.

எனவே, வேறு நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய மூன்று மருந்துகளை அடுத்தகட்ட ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்போவதாக உலக சுகாதார மையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, மலேரியாவை குணப்படுத்தக்கூடிய அர்டிசுனேட், புற்றுநோய்க்கு பயன்படுத்தக்கூடிய இமடினிப், நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் இன்பிளிக்சிமேப் போன்ற மருந்துகள் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

மருத்துவமனையில் சேர்க்கப்படும் கொரோனா நோயாளிகள் பலியாவதை இந்த மருந்துகள் தடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்த ஆராய்ச்சி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |