ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து 3 நாட்களே ஆனா பச்சிளம் குழந்தை உயிரிழந்த நிலையில் குப்பை தொட்டியில் காணப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் என்மனம்கொண்டான் பகுதிக்கு அருகே உள்ள ஒரு முருகானந்தபுரம் பகுதியில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன் கடைக்கு அருகில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் பிறந்து 3 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை தொப்புள் கொடி அறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் குழந்தையை குப்பை தொட்டியில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் நாகநாதன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாலகுருநாதன், கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரன்ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.