செல்வராகவன் அடுத்ததாக இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, காதல் கொண்டேன் போன்ற படங்கள் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது.
இவர் தற்போது நடிப்பில் ஆர்வம் காண்பித்து வருகிறார். அந்த வகையில், ”சாணிகாயிதம்” திரைப்படத்தில் நாயகனாக செல்வராகவன் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் அடுத்ததாக ருத்ர தாண்டவம், திரௌபதி படங்களின் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.