Categories
தேசிய செய்திகள்

பதவியேற்ற நான்கே மாதங்களில்…. வாட்ஸ்அப் பே செயலியின் இந்திய தலைவர் எடுத்த திடீர் முடிவு…..!!!!!

WhatsApp வாயிலாக பணப் பரிமாற்றம் செய்யும் வகையில் வாட்ஸ்அப் பே வசதியை சென்ற 2020ம் வருடம் அந்நிறுவனம் துவங்கியது. இச்சேவையை மில்லியன் கணக்கான நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். WhatsApp பயனர் ஒருவர் தன் காண்டாக்ட்டிலுள்ள ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமெனில் இந்த வாட்ஸ்அப் பே செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த WhatsApp pay செயலியின் இந்திய தலைவராக வினய்சோலட்டி என்பவர் சென்ற செப்டம்பர் மாதம் பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் வினய்சோலட்டி திடீரென்று தன் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். இவ்வாறு பதவியேற்றுக்கொண்ட 4 மாதங்களில் அவர் ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக கடந்த 2 மாதங்களுக்கு முன் வாட்ஸ்அப் இந்தியாவின் தலைவர் மனேஷ் மஹாத்மே பதவியை ராஜினாமா செய்தது கவனிக்கத்தக்கது.

Categories

Tech |