திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள எட்டிக்குளத்து பட்டியை சேர்ந்த ஆனந்த் என்பவர் பேரழகு என்ற பெண்ணை மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் வீரழகு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் வேலைக்கு சென்று வந்த நிலையில் கணவர் ஆனந்தின் செல்போன் whatsapp-ற்கு மனைவி வீரழகு ஒரு புகைப்படம் அனுப்பி உள்ளார்.
அதில் அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதைப் பார்த்து ஆனந்த் அதிர்ச்சி அடைந்தார்.மேலும் நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன் தன்னை இனிமேல் தேடி வர வேண்டாம் எனவும் பேரழகு பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்து ஆனந்தன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.அதன் பிறகு மனைவியை மீட்டுத் தரும்படி ஆனந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.