Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என்ன விட்டுட்டு போய்ட்டீங்களே… மனமுடைந்ததால் எடுத்த முடிவு… சோகத்தில் ஆழ்ந்த மனைவி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உடல்நலம் சரியில்லாததால் மனமுடைந்து முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் எருமைபாட்டியை அடுத்துள்ள தேவராயன்பட்டியில் பரமசிவம்(80) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி செல்லம்மாள். இந்நிலையில் பரமசிவம் உடல்நலக்குறைவால் பெரும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பெரும் மனமுடைந்து நிலையில் காணப்பட்டுள்ளார்.இதனையடுத்து செல்லம்மாள் நேற்று வெளிய சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டில் தனியாக இருந்த பரமசிவம் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மேலும் செல்லம்மாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பரமசிவம் உயிரிழந்த நிலையில் தூக்கியில் தொங்கியபடி இருந்துள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த எருமைப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரமசிவத்தில் உடலை மீட்டு நாமக்கல் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |