ஹெட்மயர் மற்றும் ஹோப் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது.
4-வது விக்கெட்டிக்கு களம் இறங்கிய இளம் வீரரான ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயஸ் ஐய்யர் இருவரும் நிதானமாக விளையாட இந்தியாவின் ரன்கள் உயர ஆரம்பித்தது. இருவரும் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.இருவருமே அரைசதம் நிதானமாக அடித்தனர்.
அரைசதம் அடித்த பின் அதிரடியான ஆட்டத்தை வெள்ளிப்படுத்திய ஷ்ரேயஸ் ஐய்யர் 88 பந்தில் 70 ரன்களை அடித்தார்.அதனை தொடர்ந்து ரிஷப் பண்ட் 69 பந்தில் 71 ரன்களை அடித்தார்கள். இதனால் இந்தியா 300 ரன்களை சுலபமாக எடுத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது இந்தியா 194 ரன்கள் எடுத்திருக்கும் நிலையில் 36.4 ஓவரில் ஷ்ரேயஸ் ஐய்யர் ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடி வந்த ரிஷப் பண்ட 39.4 ஓவரில் 210 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிஷப் பந்த் ஆட்டம் இழந்தார்.
கேதார் ஜாதவ் அணிக்காக 35 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். இறுதியில் ஷிவம் துபே அதிரடியாக ஆட முயன்றார். அவரும் 9 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது.இளம் வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயஸ் ஐய்யர் சிறப்பான ஆட்டத்தால் தான் 289 என்ற கடினமான இலக்கை நிர்ணியதுள்ளது.
பின்னர் 289 ரன்களை அடித்தால் வெற்றி இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது. முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒப்பனராக ஷாய் ஹோப் மற்றும் அம்பிரீஷ் களம் இறங்கினர். ஆரம்பத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது . 3-வது ஓவரில் தீபக் சகார் அம்பரீஷ் விக்கெட்டை எடுத்தார்.

