Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காய்கறி வாங்க சென்ற…. மீன் வியாபாரிக்கு…. நேர்ந்த துயரம்…!!

மீன் வியாபாரி ஒருவர் காய்கறி வாங்க சென்றபோது விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சிவபுரம் கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ்(29). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணமாகி மனைவி, மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மீன் வியாபாரம் செய்து தான் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று தன்னுடைய மோட்டார் சைக்கிளில் காய்கறி வாங்குவதற்காக பேரம்பாக்கம் சந்தை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது சென்றுகொண்டிருக்கையில், எதிர்பாராதவிதமாக ஆட்டோ ஒன்று பைக் மீது மோதியதால் ரமேஷ் பலத்த காயமடைந்துள்ளார்.

இதையடுத்து அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ரமேஷ் மருத்துவமனைக்கு கொண்டு போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து மப்பேடு காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காய்கறி வாங்க சென்ற போது மீன் வியாபாரி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்த்தியுள்ளது.

Categories

Tech |