Categories
மாநில செய்திகள்

ஸ்டாலினும் சொன்னாரு ”நம்ம தான் பெஸ்ட்” புள்ளி விவரத்தோடு அடுக்கிய எடப்பாடி…!!

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிகமான விலையை அரசு நிர்ணயித்துள்ளது என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.

சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பால் விலை உயர்வு குறித்து விளக்கம் அளித்தார். அதில் பாலின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்ற நீண்ட நாள் கோரிக்கையை இப்போது தான் அரசு செய்துள்ளது. ஏற்கனவே பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று எதிர்கட்சி தலைவரும் சட்டசபையில் வலியுறுத்தினார் என்று முதல்வர் விளக்கம் அளித்தார்.

Image result for edappadi palanisamy interview

மேலும் பால் உற்பத்தியாளர்கள்  சங்கங்கள் நஷ்டத்தில் இருக்கிறது . மற்ற மாநிலங்களை விட நாம் தான் கொள்முதல் விலை வழங்கப்படுகின்றது.என்று புள்ளி விவரத்தோடு பேசினார். அதில் கர்நாடகாவில் 29. 72 ரூபாய்க்கும் , கேரளாவில் 34.71 ரூபாய்க்கும்,  ஆந்திராவில் 28. 13 ரூபாய்க்கும்,  தெலுங்கானா 27.30 ரூபாய்க்கும் ,  குஜராத் 30.37 ரூபாய்க்கும் கொடுக்கும் சூழலில் தமிழகத்தில் தான் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று 32 ரூபையாக நிர்ணயித்துள்ளோம் என்று முதலவர் தெரிவித்தார்.

Categories

Tech |