DGCI அனுமதி கொடுத்தால் மீண்டும் தடுப்பூசி பணிகளை தொடர தயாராக உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புனேயை சார்ந்த சீரம் நிறுவனம் தயாரித்திருந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் தன்னார்வலர் ஒருவருக்கு போட்டு பரிசோதித்து பார்த்த போது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. அதாவது நான்கு நாடுகளில் இந்த பரிசோதனை நிறுத்தப்பட்டதை அடுத்து, இந்தியாவில் அந்த தடுப்பு மருந்தை தயாரிக்கும் சீரம் நிறுவனமும் தங்களுடைய பரிசோதனையை நிறுத்தியது.
ஆனால் நேற்று முதல் இங்கிலாந்தில் கொடுக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு மீண்டும் பரிசோதனைகள் தொடர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சீரம் நிறுவனமும் பரிசோதனைகளைத் தொடர தயார் என அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையமான DGCI அனுமதி கொடுத்தால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து பரிசோதனையைத் மீண்டும் தொடர தயாராக உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.