Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ஆன்லைன் கிளாஸ் கவனி” கோபமடைந்த சிறுவர்கள்…. செய்த செயல்…!!

ஆன்லைன் வகுப்பு கவனிக்க சொன்னதால் கோபமடைந்த சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வசிப்பவர் சேகர். இவருடைய மகன்கள் புவனேஷ்(11) மற்றும் கிஷோர்(4). இவர்கள் இருவரும் தனியார் அங்குள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து இந்த இரண்டு சிறுவர்களும் வகுப்பில் கவனம் செலுத்தாமல் விளையாடுவதாக பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த சிறுவர்கள் ராணிப்பேட்டையிலிருந்து திருத்தணிக்கு பேருந்தில் ஏறி சென்றுள்ளனர். மேலும் அங்கிருந்து எங்கு செல்வது என்று தெரியாமல் சிறுவர்கள் முழித்து கொண்டிருந்துள்ளனர். இதனால் அங்கிருந்த பயணிகளுக்கு இவர்கள் மீது சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து அவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காவல்துறை விசாரணையில் சிறுவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடி வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் சிறுவர்கள் இருவரையும் காவல்துறையினர் அவருடைய பெற்றோர்களிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |