சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவிலில் தாசில்தார் ஜெய நிர்மலா தேவையில்லாமல் முழு ஊரடங்கில் வெளியில் சுற்றித் திரிந்த வாலிபர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் தாசில்தார் ஜெய நிர்மலா தலைமையில் காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தினேஷ் ஆகியோர் அடங்கிய குழு முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது முழு ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறி பரமக்குடி சாலையில் தேவையில்லாமல் சுற்றியிருந்த நபர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.
மேலும் தாசில்தார் ஜெய நிர்மலா ஒரு சிலரை எச்சரிக்கை விடுத்தும் அனுப்பி வைத்துள்ளார். கொரோனா வேகமாக பரவி வரும் காலகட்டத்தில் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் சுற்றி வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.